பதிவேட்டறை மற்றும் களஞ்சிய அறை - அக்கரைப்பற்று பிரதேச செயலகம்
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உற்பத்தித் திறன் மேன்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பதிவேட்டறை, களஞ்சிய அறை என்பனவற்றை திறந்துவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷேக். எம். எஸ். எம். றஸ்ஸான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட செயலக பிரதான கணக்காளர் ஜனாப். எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
Iஇந்நிகழ்வில் கணக்காளர் ஜனாப். எஸ். எல். சர்தார் மிர்ஸா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஏ.எம். தமீம், நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். எம்.எஸ். பாறூக், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.எம். தாஹிர், தலைமைபீட சமூர்த்தி முகாமையாளர் ஜனாப். எம்.பி. ஹுஸைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஜனாப். எம்.எஸ்.எம். மெளலானா மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலக உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.






















